மாதரே ... -2023

உலக மகளிர் தினத்தை முன்னிட்ட
பேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 2023ஆம் ஆண்டிற்கான செயற்குழு "மாதரே.."  என்ற நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. அந்தவகையில் 27.04.2023 திகதியன்று மாலை 6.30 மணியளவில் பேராதனைப் பல்கலைக்கழக, பல் மருத்துவபீட, பம்பரதெனிய மண்டபத்தில் இந் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது .

மகளிர் தினத்தையொட்டி மகளிரை மையப்படுத்தி  கவிதைப்போட்டி மற்றும் விவாதப் போட்டிகள் முன்கூட்டியே நடத்தப்பட்டிருந்தன .அன்றைய தினத்தில்  ஆலடி மாநாடு உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுடன்  "பெண் உணர்வுகளை வெளிப்படுத்தும் மாதவப் பெண் "எனும் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது....

நிகழ்வின் அடுத்த கட்டமாக கவிதைப்போட்டி மற்றும் விவாத போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து  மேலும் சில கலை நிகழ்வுகளுடன் "மாதரே-2023" இனிதே நிறைவடைந்தது.

 இந்நிகழ்விற்கு பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள் , மாணவர்கள் , கல்வி சரா ஊழியர்கள் என பெருந்திரளானோர் வருகைத் தந்து சிறப்பித்தனர்.