சித்திரையின் வர்ணஜாலம்  ... 

தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு பேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 2023ஆம் ஆண்டிற்கான செயற்குழு "சித்திரையின் வர்ணஜாலம் .."  என்ற ஓவியப் போட்டியினை நடாத்தியது.

இவ் ஓவியப் போட்டியானது நாட்டில் உள்ள 16-28 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து ஓவியர்களையும் மையப்படுத்தி நடாத்தப்பட்டது.ஓவியங்கள் பதிவுத்தபால் மற்றும் மின்னஞ்சல் ஊடாக பெறப்பட்டதுடன், அவை தமிழ்ச்சங்க முகநூல் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டன.

போட்டியின் முதல் மூன்று இடங்களுக்குரிய வெற்றியாளர்கள் நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்குரிய சான்றிதழ்களும், முறையே 5000,3000,2000 பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இவை மட்டுமன்றி முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஓவியங்களிற்கு கிடைக்கப்பெற்ற விருப்புக்குறிகளின் (Facebook likes) மூலம் ஓர் ஓவியம் தெரிவு செய்யப்பட்டு சிறப்பு பரிசாக ரூபா 5000  வழங்கப்பட்டது.

எடுக்கப்பட்ட புகைப்படங்கள்✨