கல்விச்சாரல்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் கல்விச்சாரல் என்ற செயற்திட்டத்தின் கீழ் நடாத்திய க. பொ. த உயர்தர மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்கு 📚✒️

கடந்த 04ம் திகதி  பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கணிதம், உயிரியல், கலை, வணிகம் ஆகிய நான்கு பிரிவு மாணவர்களுக்குமான மாதிரி வினாத்தாள்களின் கலந்துரையாடலும், அப்பாடம் சார்ந்த சந்தேகத்திற்குரிய பகுதிகளுக்கான தெளிவுப்படுத்தல்கள், பரீட்சை செய்யும் நுணுக்கங்கள் , மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல்களோடு மட்டுமல்லாமல் உயர்கல்வி மற்றும் தொழில் சார் வழிகாட்டல்கள் என்பனவற்றோடு சிறப்பாக இடம்பெற்றது. 


இவ் உதவிக்கருத்தரங்கிற்கு ஆதரவளித்த பாடசாலை சமூகத்திற்கும், கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் கல்வி சார் ஊக்கங்களை அளித்த வளவாளர்களுக்கும் நன்றிகளும்  பாராட்டுகளும்.❤️🎉


உதவிக்கருத்தரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்✨

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட க. பொ. த உயர்தர மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்கு 📚✒️ 

கடந்த  26ம் திகதி  க/ மதீனா தேசிய பாடசாலையில் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான பௌதிகவியல் மாதிரி வினாத்தாள்களின் கலந்துரையாடல்கள் , அப்பாடம் சார்ந்த சந்தேகத்திற்குரிய பகுதிகளுக்கான தெளிவுப்படுத்தல்கள், பரீட்சை செய்யும் நுணுக்கங்கள் தொடர்பான அறிவுறுத்தல்,

உயர்கல்வி  வழிகாட்டல் மட்டுமின்றி மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல் என்பன வளவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. 

இவ் உதவிக்கருத்தரங்கிற்கு ஆதரவளித்த பாடசாலை சமூகத்திற்கும், கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் கருத்தரங்கை நடாத்த உதவிய வளவாளர்களுக்கும்  நன்றிகளும்  பாராட்டுகளும்.❤️🎉 

உதவிக்கருத்தரங்கில்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள்✨

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட க. பொ. த உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 📚✒️

கார்த்திகை மாதம் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் புசல்லாவ க/ சரஸ்வதி மத்திய கல்லூரியில்  கணிதம், விஞ்ஞானம், கலை மற்றும் வர்த்தகம் ஆகிய நான்கு பிரிவு மாணவர்களுக்குமான  எழுத்தாயுதம் மாதிரி வினாத்தாள்களின் கலந்துரையாடல்கள் , பாடம் சார்ந்த சந்தேகத்திற்குரிய பகுதிகளுக்கான தெளிவுபடுத்தல்கள், பரீட்சை செய்யும் நுணுக்கங்கள் தொடர்பான அறிவுறுத்தல், அத்துடன் மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல் என்பன வளவாளர்களாக கலந்து கொண்ட எமது பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு ஆதரவளித்த பாடசாலை சமூகத்திற்கும், அனுசரணை வழங்கிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினருக்கும், கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் கருத்தரங்கை நடாத்த வளவாளர்களாக இணைந்து கொண்ட  பல்கலைக்கழக நண்பர்களுக்கும் நன்றிகளும்  பாராட்டுகளும்.❤️🎉

வழிகாட்டல் கருத்தரங்கில்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள்✨