தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான "எழுத்தாயுதம்" ஆனது க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்களை வளவாளர்களைக்கொண்டு   தயாரிப்பதுடன் நாடளாவிய ரீதியில் உதவிக்கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது.

அவ்வகையில் அகில இலங்கை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் இவ்வினாத்தாள்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இணையத்தினூடாக இவ்வினாத்தாள்களை விநியோகிக்கின்றோம்.