புதுவசந்தம் - 2023

புதுமுகத்தமிழ் மாணவர்களை வரவேற்கும் முகமாக பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் ஆனது வருடந்தோறும்  "புதுவசந்தம்"  என்ற நிகழ்வினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டிற்கான புதுவசந்தம் நிகழ்வானது   25.07.2023 ஆம் திகதியன்று மாலை 6.30 மணியளவில் பேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 97 ஆவது செயற்குழுவினால் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின்  E.O.E பெரேரா அரங்கில் நிகழ்த்தப்பட்டது.

புதுமுகத் தமிழ் மாணவர்களை வரவேற்கும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும், பேராதனை போதனா வைத்திய சாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணரும் ஆகிய திரு சி. கிருஷ்ணபிரதீப்  அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர், பெரும்பொருளாளர், கணக்காய்வாளர் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள் , சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வானது புதுமுகத் தமிழ் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி நிகழ்வின் நடுப் பகுதியில்  புதுவசந்தத்தின் சிறப்பம்சமாக மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய நறுமுகை சிறப்பிதழ் பிரதம விருந்தினரால் வெளியிட்டு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  மேலும் பல்வேறு கண்கவர் கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டது. இறுதியில் செயலாளரின் நன்றியுரையுடன் புதுவசந்தம் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.

தெளிவான புகைப்படங்களுக்கு ➡️ drive.google.com/drive/folders/1RXrZtlo9TBryJVjwVu7uiUX5FbzslDCp?usp=drive_link 


நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்✨